உடுமலை அதிமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல்

உடுமலை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகரின் மகன் கோகுல்நாத்தின் வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகரின் மகனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.

உடுமலை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமி என்கிற சிவராஜின் மகன் கோகுல்நாத், கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்க பொள்ளாச்சி நோக்கி சொகுசு காரில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இந்நிலையில், இன்று உடுமலை மின் நகரில் உள்ள கோகுல்நாத்தின் இல்லத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன், முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், எம்.எஸ். ஆனந்தன் மற்றும் உடுமலை நகர அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...