ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்கம்

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற பயிலரங்கமும் நடத்தப்பட்டது.


கோவை: ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, நிர்வாக மருத்துவ இயக்குனர் Dr. சந்தோஷ் குமார் டோரா, மருத்துவ இயக்குனர் - (Operations) Dr.சந்தோஷ், இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம், ஹார்ட் பெயிலியர் கிளினிக் மற்றும் எக்கோ கார்டியாலஜி துறை தலைமை மருத்துவர் Dr. சண்முகசுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர்.



நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரத்தியேக கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துவக்க விழாவின்போது, நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சை உத்திகள் குறித்த மருத்துவத் தொடர் கல்வி (CME) பயிலரங்கம் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் இருதியவியல், நுரையீரல் சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் குறித்து விளக்கப்படங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.



இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.



ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம் கூறுகையில், "நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் சிறந்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிறந்த முறையில் பயனடையும் வகையில் இந்த கிளினிக் துவங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய அறிகுறி என்றும் அத்தகைய அறிகுறி தென்படும் போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடையலாம்" என்றும் அவர் கூறினார்.

இந்த பிரத்தியேக கிளினிக்கை துவங்குவதன் மூலம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான விரிவான சிகிச்சையை வழங்குவதில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை முன்னணி பங்கு வகிக்கும் எனலாம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...