கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸ் திடீர் சோதனை

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சில அறைகளில் போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம், சரவணம்பட்டி, அத்திப்பாளையம் பகுதிகளில் செயல்படும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் வாடகை வீடுகளில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீஸ் குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா, விடுதிகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதே இந்த சோதனையின் நோக்கமாகும்.



விடுதிகளில் தங்க விரும்பாத மாணவர்கள் தனியாக வாடகை வீடுகளில் தங்கி வரும் நிலையில், அத்தகைய வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, மாணவர்கள் தங்கியிருக்கும் சில அறைகளில் உயர ரக போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் விடுதிகளிலும் தொடர்ந்து இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...