ஆனைமலையில் நெல் அறுவடை தொடக்கம்: காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை தொடங்கியது. விவசாயிகள் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் இன்று தொடங்கின.



சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.



ஆழியார் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு மற்றும் போதுமான அளவு பருவமழை பெய்ததால், வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது.



அறுவடைப் பணிகளை தொடங்குவதற்கு முன், விவசாயிகள் முதலில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை வயலில் உள்ள காவல் தெய்வத்திற்கு படையலிட்டு, பொங்கல் வைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.



இதைத் தொடர்ந்து, வயல்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இந்த நிலையில், விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

1. ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் கோபத்திற்கு நெல் அறுவடை செய்யும் போது மட்டும் கொள்முதல் நிலையங்களை திறக்காமல், நிரந்தரமாக கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

2. கேரளா மாநிலத்தைப் போல, நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் கொள்முதல் விலையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

3. நெற்கதிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...