சர்வதேச காராத்தே சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஆஸ்திரியாவில் நடைபெற்ற 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு சரவணம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவையைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச கராத்தே போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை பாராட்டும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் புனேவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கோஜுரியோ கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவை வீரர்கள், ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆஸ்திரியாவில் நடந்த 7வது உலக கோஜுரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 26 நாடுகளில் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய அணி சார்பில் கோவையைச் சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே, குழு என வயது மற்றும் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையைச் சேர்ந்த கைலாஷ், சுனில், நந்தகுமார், ஆகாஷ், மஹா கவுரி ஆகிய ஐந்து பேரும் தலா ஒரு வெண்கலப் பதக்கமும், தார்ணீஷ் என்ற மாணவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர்.

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கோவை சரவணம்பட்டி பகுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் கராத்தே சாம்பியன்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஏசியன் கராத்தே அகாடமி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் பகுதி செயலாளர் சிரவை சிவா, பார்த்திபன், பாஸ்கரன், சென்செய் ஆர்.முத்துராஜு, ஹென்றி சுரேஷ், சென்செய் பிரமோஷ், கோபாலகிருஷ்ணன், செந்தில்வேல், ஷிஹான் டி.முத்தையா, சுகுமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...