சூலூரில் தேசிய மாணவர் படையின் சிறப்பு முகாம் தொடக்கம்

சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் செப்டம்பர் 29 முதல் நடைபெறுகிறது. குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாமும் இதில் அடங்கும்.


கோவை: சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக தேசிய மாணவர் படை (NCC) சிறப்பு முகாம் செப்டம்பர் 29 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முகாம் சிறப்பு முகாம் மற்றும் கோவை மண்டல என்.சி.சியின் குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாம் என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது.

இந்த முகாமிற்கு லெப்டினன்ட் கர்னல் ஒய்னம் கமான்டிங் அதிகாரியாக உள்ளார். பத்து நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கோவை 4-ஆம் பட்டாலியனின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்களும், நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் அனிர்பன் பெளமிக் அவர்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர்படை அலுவலர்களும், சுபேதார் மேஜர் பாண்டியன் தலைமையிலான இராணுவத்தினரும் பயிற்சி அளித்து வருகின்றனர்.



கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஊட்டி, சேலம், நாமக்கல், திருச்சங்கோடு, தர்மபுரி பகுதிகளைச் சார்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ, மாணவியரும் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர். இம்முகாமில் குடியரசு தின முகாமிற்கான சிறந்த மாணவர் தேர்வு, கலைநிகழ்ச்சிகள், என்.சி.சி. வகுப்புகள், துப்பாக்கி சுடுதல், ஆயுதப் பயிற்சிகள், அணிவகுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு முகாமிற்கு ஆர்.வி.எஸ். கல்லூரி தேசிய மாணவர்ப் படை அலுவலர் கேப்டன் டாக்டர் தீபக் ரிஷாந்த் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...