கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை பணிகள் தொடக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் நாயக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் PRG அருண்குமார் MLA முன்னிலையில் தொடங்கியது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயக்கம்பாளையம் ஊராட்சியில் இரண்டு இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



முதல் திட்டத்தின் கீழ், சபரி நகர் முருகன் வீடு முதல் ரங்கசாமி வீடு வரை மற்றும் திரிங்கா நகர் ரங்கராஜ் வீடு முதல் தினகரன் வீடு வரை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இரண்டாவது திட்டத்தின் கீழ், பாலமலை மெயின் ரோடிலிருந்து அசோகன் வீடு வரையில் ஒன்றிய குழு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்.



இந்த இரண்டு திட்டங்களுக்கும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான PRG அருண்குமார் MLA அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் நர்மதா துரைசாமி, கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாலை திட்டங்கள் நிறைவடைந்தால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...