கோவை வ.உ.சி. பூங்காவில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. பூங்கா, உயிரியல் பூங்கா, முதியோர் பூங்கா, கணிதப் பூங்கா மற்றும் உணவுக்கூடத்தை ஆய்வு செய்தார். பூங்காக்களின் பராமரிப்பு மற்றும் புதிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள வ.உ.சி. பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண் 83-ல் அமைந்துள்ள இப்பூங்காக்களின் தற்போதைய நிலை குறித்து அவர் நேரில் பார்வையிட்டார்.

மேயர் ரங்கநாயகி, வ.உ.சி. பூங்கா வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணிதப் பூங்காவின் பணிகளை ஆய்வு செய்தார். இப்பூங்கா குழந்தைகளுக்கு கணித கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.



வ.உ.சி. பூங்கா எதிரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தையும் (Food Street) மேயர் பார்வையிட்டார். இந்த உணவுக் கூடம் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான உணவு வகைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



அடுத்ததாக, வ.உ.சி. முதியோர் பூங்காவை பார்வையிட்ட மேயர், பூங்காவின் தூய்மை நிலை குறித்து கேட்டறிந்தார். பூங்காவை சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.



ஆய்வின் ஒரு பகுதியாக, ராம் நகர் மற்றும் ஆர்.ஆர்.சாமி லைன் பகுதியில் மாநகராட்சியின் நவீன வாகனம் மூலம் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு பணிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டார். சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் சுமா, செயற்பொறியாளர் கருப்பசாமி, கால்நடை மருத்துவர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...