கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று (அக்டோபர் 8) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% வரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வருடா வருடம் வரி உயர்வு மக்களை பாதிக்கும் என்றும் வேலுமணி தெரிவித்தார்.



கொரோனா காலத்திலும் மக்களை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிகளை உயர்த்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வேலுமணி தெரிவித்தார். இப்போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...