கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று (அக்டோபர் 8) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% வரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வருடா வருடம் வரி உயர்வு மக்களை பாதிக்கும் என்றும் வேலுமணி தெரிவித்தார்.



கொரோனா காலத்திலும் மக்களை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிகளை உயர்த்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வேலுமணி தெரிவித்தார். இப்போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...