பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கோவை: பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் டாக்டர் மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.



மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் மணிவண்ணன் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜதரங்கனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



முன்னதாக மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி கோட்ட காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாலக்காடு சாலை, கோவை சாலை வழியாக சென்று மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பெண்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான மார்பக புற்றுநோய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் சுய பரிசோதனை செய்வதோடு, ஏதாவது அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், டாக்டர் மனீஷ் கேன்சர் மையத்தில் நடைபெறும் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாமை பெண்கள் முற்றிலும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...