கோவை தியாகி சண்முகா நகரில் குடியிருப்போர் கோரிக்கைகளை கேட்டறிந்த திமுக செயலாளர் நா.கார்த்திக்

கோவை தியாகி சண்முகா நகரில் திமுக செயலாளர் நா.கார்த்திக் குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பூங்கா, மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதியளித்தார்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி-2, வார்டு எண் 61, திருச்சி சாலையில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, புதிய பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை குடியிருப்போர் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக நா. கார்த்திக் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதி 2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, வட்டக்கழக செயலாளர்கள் தென்னவர் செல்வராஜ், அன்பு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹட்கோ ஜெயராமன், வார்டு நிர்வாகிகள் பூங்கொடி, கவியரசு, கலைச்செல்வன், கருணாநிதி, கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...