கோவை: பொன்னூத்து அம்மன் கோவிலை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

கோவை மாவட்டம் பன்னீர்மடை அருகே வாரப்பாளையத்தில் உள்ள பொன்னூத்தம்மன் கோவிலுக்குள் நுழைந்த யானைக் கூட்டம் கோவில் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இச்சம்பவம் அக்டோபர் 7 இரவு நடந்தது.


கோவைe: கோவை மாவட்டத்தில் உள்ள பன்னீர்மடை அருகே வாரப்பாளையத்தில் பொன்னூத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி இப்பகுதிக்கு யானைக் கூட்டங்கள் வருவதும் செல்வதும் வழக்கமாக உள்ளது.



இந்நிலையில், நேற்று (அக்டோபர் 7) இரவு, கோவிலுக்கு வந்த யானைக் கூட்டம் கோவில் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...