கோவை சிறுமி முதல்வருக்கு அனுப்பிய கடிதம்: திரையரங்க அறிவிப்பில் எழுத்துப்பிழை சுட்டிக்காட்டி கோரிக்கை

கோவையில் 10 வயது சிறுமி பிரணவிகா திரையரங்க அறிவிப்பில் உள்ள எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். பொது அறிவிப்புகளில் தவறு இல்லாமல் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள PSG பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி பிரணவிகா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு முக்கியமான கடிதம் எழுதியுள்ளார். திரையரங்கில் காட்டப்படும் பொது அறிவிப்பில் உள்ள எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டி, அதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி, பிரணவிகா தனது தந்தையுடன் கோவை PROZONE மாலில் உள்ள திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளார்.



அப்போது திரைப்படத்திற்கு முன் காட்டப்பட்ட "புகைபிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரை கொல்லும்" என்ற எச்சரிக்கை அறிவிப்பில், "கொல்லும்" என்ற வார்த்தை "கொள்ளும்" என தவறாக எழுதப்பட்டிருந்தது. இதனை கவனித்த பிரணவிகா, தனது தந்தையிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவரும் அதில் தவறு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த எழுத்துப்பிழை தன்னைப் போன்ற பலரின் மனதில் பதியக்கூடும் என்பதால், இதனை மாற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழ் மொழி மீதான தனது பற்றின் காரணமாகவே இந்த விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழை காக்கும் தமிழ் நாட்டின் முதல்வர்" என முதலமைச்சரை விளித்த பிரணவிகா, "செம்மொழியான தமிழ் மொழியை மென்மேலும் வளர்க்க" வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கடிதத்தை அக்டோபர் 8 ஆம் தேதி கோவை பீளமேடு துணை அஞ்சலகத்தில் இருந்து முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த சிறுமியின் தமிழ் மொழி மீதான ஆர்வமும், பொது விஷயங்களில் காட்டும் அக்கறையும் பாராட்டுக்குரியது. பொது இடங்களில் காட்டப்படும் அறிவிப்புகளில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது முக்கியம் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...