சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 6 மாத காலத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10.82 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 37.1 சதவீதம் அதிகமாகும்.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10,82,514 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 37.1 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 1,36,832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தொடர்பாக 79,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட வழக்குகளில் 16.2 சதவீதமும், அபராதத் தொகையில் 20 சதவீதமும் அதிகமாகும்.

குழந்தைகளுக்கான டிக்கெட்டில் பெரியவர்கள் பயணித்தல், சாதாரண வகுப்பு டிக்கெட்டில் உயர் வகுப்பில் பயணித்தல், வேறு வகுப்பில் பயணம், சாதாரண ரயில் டிக்கெட்டில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தல், பயண தூரத்தைக் காட்டிலும் கூடுதலாக பயணித்தல் உள்ளிட்ட முறைகேடான பயணங்களுக்கு 68,681 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.71 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 68.9 சதவீதம் அதிகமாகும்.

முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டு சென்றதற்காக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் பொறுத்தவரை, முதல் வகுப்பு ஏ.சி.யில் ஒரு பயணி 70 கிலோ வரை இலவசமாகக் கொண்டு செல்லலாம். டயர் 2 ஸ்லீப்பர் அல்லது முதல் வகுப்புக்கு 50 கிலோ, ஏ.சி. 3 டயர் ஸ்லீப்பர் 40 கிலோ, ஸ்லீப்பர் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை இலவசமாக கொண்டு செல்லலாம். கூடுதல் சுமைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அக்டோபர் 8 அன்று வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...