ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 83 லட்சத்திற்கும் மேல் காணிக்கை: தங்கம், வெள்ளியும் கிடைத்தது

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 அன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம் ரூ.83,70,893, 178 கிராம் தங்கம், 304 கிராம் வெள்ளி கிடைத்தது. அறங்காவலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: ஆனைமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

காணிக்கை எண்ணும் பணியில் சலவநாயக்கன்பட்டி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.23,24,376 மற்றும் நிரந்தர உண்டியலில் ரூ.60,46,517 என மொத்தம் ரூ.83,70,893 கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 178 கிராம் தங்கமும், 304 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, பொள்ளாச்சி ஆய்வர் பாக்கியவதி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த காணிக்கை தொகை கோவிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...