ஆனைகட்டி அருகே சுருக்கு கம்பியால் மான் வேட்டையாடிய 5 பேர் கைது

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஆர்நாட்டுக்காடு பகுதியில் சுருக்கு கம்பி மூலம் பெண் புள்ளி மான் வேட்டையாடப்பட்டது. வனத்துறையினர் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள ஆர்நாட்டுக்காடு பகுதியில் மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்டோபர் 9 அன்று ரோந்து சென்ற வனத்துறையினர், பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் சுருக்கு கம்பி மூலம் பெண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடியதை கண்டறிந்தனர்.

விசாரணையில், பழனிச்சாமியின் வீட்டு அருகே உள்ள பள்ளத்தில் வைத்து மானை தோலுரித்து, வெட்டுக்கத்தி மூலம் கூறு போட்டதாக தெரியவந்தது. பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலா 2 கிலோ மான் இறைச்சியை தங்கள் வீட்டிற்கு சமைப்பதற்காக எடுத்துச் சென்றனர்.

மீதமுள்ள சுமார் பத்து கிலோ மான் இறைச்சியை தடாகம் பகுதியில் உள்ள மாதேஷ், மணிகண்டன், குரு ஷியாம் ஆகிய மூன்று பேருக்கு 4,000 ரூபாய்க்கு விற்றுள்ளதாக தெரியவந்தது. வனத்துறையினர் இந்த தகவலின் அடிப்படையில் மூவரையும் கைது செய்தனர்.

வனத்துறையினர் மானை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்ட மொத்தம் 5 பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் வனவிலங்குகள் பாதுகாப்பு முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...