கோவை மேற்கு மண்டலத்தில் 'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் - ஆணையாளர் தொடங்கி வைத்தார்

கோவை மேற்கு மண்டலத்தில் 'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் வடவள்ளி காமாட்சியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தலைமையில் பல்வேறு துறைகளின் சேவைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 36ல் உள்ள வடவள்ளி ஸ்ரீ அருள்மிகு சக்தி காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாம் இன்று (10.10.2024) நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மேற்கு மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த முகாமில் வருவாய், பொறியியல், பொது சுகாதாரம் மற்றும் நகரமைப்பு பிரிவுகளின் சார்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. சொத்துவரி, குடிநீர் இணைப்பு, தெரு விளக்கு, சாலை பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ், குப்பை அகற்றுதல், கட்டிட அனுமதி போன்ற பல்வேறு சேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக தீர்வு காணப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகளும் வழங்கப்பட்டன. மாநகராட்சியின் சேவைகளை பெற்று பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.



இந்நிகழ்வில் துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க. சிவகுமார், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ், மாநகர தலைமைப் பொறியாளர் (பொ) முருகேசன், நகர்நல அலுவலர் மரு. கே. பூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...