கோவை வேளாண் பல்கலையில் மருத்துவ தாவரங்கள் பயிற்சி: விவசாயிகள், தொழில் முனைவோருக்கு அழைப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 18ம் தேதி மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. விவசாயிகள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் துறை சார்பில் வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று "மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள்" குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள், அறிவியல் பட்டதாரிகள், நாற்றங்கால் உரிமையாளர்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் மகளிர் பங்கு கொண்டு பயனடையலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் முக்கியமான அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவு மற்றும் திறன்களை பரப்புவதாகும். இதன் மூலம் தரமான நடவுப் பொருட்களுடன் உயர்தர மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதோடு, புதிய தொழில் முனைவோருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர முடியும்.

இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1,000 ஆகும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98429-31296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...