கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வாரம் முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Coimbatore: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகே அமைந்துள்ள பரளிக்காடு பகுதி, காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான சூழல் சுற்றுலா மையமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதி, கோவை காந்திபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காரமடையில் இருந்து 30 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ளது.




காரமடை வனத்துறை மற்றும் பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இந்த சூழல் சுற்றுலா, சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.




பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் முக்கிய அம்சங்களாக பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவுகள், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல், வனப்பகுதியில் நடைப்பயணம் மற்றும் பழங்குடியினரின் கலாசார நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவு வகைகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.




கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் இயற்கை மற்றும் நீர்நிலைகள் அமைந்த பகுதிகளுக்கு அதிகம் சென்று வருகின்றனர். இதையடுத்து, மே 1 முதல் மே 31 வரை தினமும் பரளிக்காடு சூழல் சுற்றுலா இயக்கப்படும் என காரமடை வனச்சரகர் அறிவித்திருந்தார். இதனால், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.




இந்நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரளிக்காடு சூழல் சுற்றுலா இந்த வாரம் முழுவதும் தற்காலிகமாக மூடப்படுவதாக காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை சூழ்நிலை சாதகமான பிறகு மீண்டும் சூழல் சுற்றுலா தொடங்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...