இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது பாசனம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த குளம் 75 ஏக்கருக்கு மேல் பாசன வசதியை வழங்குவதுடன், பல கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பாசனம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை, அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து, 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும். இது பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்.



தண்ணீர் திறப்பு நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பேசிய எம்பி ஈஸ்வரன், "இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் சாமிநாதன், திட்டக்குழு தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினரின் முயற்சியால் தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கான அரசு என்பதற்கு இது ஒரு சான்றாகும்" என்றார்.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளம் செயற்பொறியாளர் விஜயசேகரன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், பூசாரி நாயக்கன் குளம் பாசன சபை நிர்வாகிகள் காளிமுத்து, மாடர்ன் மகாலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...