இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது பாசனம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த குளம் 75 ஏக்கருக்கு மேல் பாசன வசதியை வழங்குவதுடன், பல கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பாசனம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை, அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து, 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும். இது பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்.



தண்ணீர் திறப்பு நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பேசிய எம்பி ஈஸ்வரன், "இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் சாமிநாதன், திட்டக்குழு தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினரின் முயற்சியால் தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கான அரசு என்பதற்கு இது ஒரு சான்றாகும்" என்றார்.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளம் செயற்பொறியாளர் விஜயசேகரன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், பூசாரி நாயக்கன் குளம் பாசன சபை நிர்வாகிகள் காளிமுத்து, மாடர்ன் மகாலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...