கோவை துடியலூரில் மத மோதல் அபாயம்: இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

கோவை துடியலூரில் பள்ளிவாசல் முன் தொழுகை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மத மோதல் அபாயம் குறித்து இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன. பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை துடியலூர் பகுதியில் மத மோதல் அபாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவில் கூறியுள்ள விவரங்கள்:

துடியலூர் சந்தை மைதானத்துக்கு பின்புறம் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது அருகிலுள்ள மாகாளியம்மன், மங்கையம்மன், பொன்னியம்மன், விநாயகர் கோயில்களிலும் விழாக்கள் நடைபெறும்.

விநாயகர் கோயில் முதல் மாகாளியம்மன் கோயில் வரையிலான பாதையில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. கடந்த ஒரு மாதமாக வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்று கூறி பள்ளிவாசல் முன்பு தொழுகை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.

பள்ளிவாசல் உள்ளே தொழுகை நடத்தினால் பிரச்னை இல்லை. ஆனால் வெளியில் தொழுகை நடத்துவதால் மற்ற மத மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை.

திருப்பூர் போன்று துடியலூர் பகுதிகளிலும் பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக சந்தேகம் உள்ளது. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வக்பு வாரியம் மூலம் சில இடங்களில் பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சரியான ஆதாரம் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் சொத்துகளை விற்கவோ, வாங்கவோ முடியாமல் தவிக்கின்றனர்.

துடியலூர், அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...