சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நடமாடி வருகிறது. முன்னர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர், நெல்லித்துறை, தாசம்பாளையம் போன்ற கிராமங்களில் அதிகம் நடமாடிய இந்த யானை, அண்மைக்காலமாக சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வருகிறது.



இந்நிலையில், இன்று இரவு சுமார் 7:00 மணியளவில் காட்டு யானை பாகுபலி சிறுமுகை-லிங்கபுரம் சாலையில் லிங்கபுரம் கிராமத்தின் அருகே நடந்து வந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டு யானை சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த நிலையில், இது குறித்து உடனடியாக உள்ளூர் மக்களுக்கும், சிறுமுகை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் லிங்காபுரம் ஊர் மக்கள் இணைந்து டார்ச் லைட்டுகளை அடித்து, சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை பாகுபலியை அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதற்கு முன்னதாக, காட்டு யானை பாகுபலி சாலையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டு சாலையின் நடுவே நின்றதால், அந்த வழியாக வந்த வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...