பொள்ளாச்சி அருகே சிறுத்தை தாக்குதல்: கன்று குட்டி காயம்

பொள்ளாச்சி அருகே புளியங்காண்டியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை கன்று குட்டியை தாக்கியது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சம்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்த புளியங்காண்டி பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கன்று குட்டியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன. இப்பகுதியில் அவ்வப்போது காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் புளியங்காண்டி அருகே சுபாஷினி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து தோட்டத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுத்தை ஒன்று கன்று குட்டியை வேட்டையாட முயற்சித்துள்ளது. தோட்டத்தில் பணிபுரிபவர்கள் உடனடியாக சிறுத்தையை அங்கிருந்து விரட்டினர்.



சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி மற்றும் தோட்டத்தில் உள்ள நாய் ஆகியவை லேசான காயங்களுடன் உயிர்தப்பின. காயம்பட்ட விலங்குகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

குடியிருப்பு பகுதிக்கு அருகில் சிறுத்தை நடமாடுவதால் அச்சமடைந்த பொதுமக்கள், அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...