பொள்ளாச்சியில் கள்ளு இறக்கிய விவசாயிகள் கைது: டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சியில் கள்ளு இறக்கிய விவசாயிகளை போலீசார் கைது செய்ததை கண்டித்து, விவசாயிகள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைதான விவசாயிகளை விடுவிக்க கோரி, சாலை மறியல் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுத்தனர்.



கோவை: பொள்ளாச்சி உட்கோட்ட காவல்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏ.எஸ்.பி. கிருஸ்டி சிங், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் கள்ளு இறக்கப்படுகிறதா என ஆய்வு செய்து, கள்ளு இறக்கும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாராயணசாமி விவசாய சங்கம் சார்பில் அதன் கொள்கை பரப்புச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஏ.எஸ்.பி., விவசாயிகளை சந்திக்க முயன்ற போது, சிறிது வேலை இருப்பதாக கூறி வாகனத்தில் ஏறி சென்று விட்டார்.



இந்த நிலையில், ஏ.எஸ்.பி. வரும் வரை டிஎஸ்பி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருந்து வருகின்றனர். தமிழகத்தில் உடலை பாதிக்கக்கூடிய மது விற்பனை செய்யப்பட்டு வருவதால், முதலில் சம்பந்தப்பட்ட அமைச்சரையும், முதலமைச்சரையும் கைது செய்துவிட்டு பின்னர் கள்ளு இறக்கும் விவசாயிகளை கைது செய்யட்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளு இறக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சரிடம் கேட்டு அறிந்து தமிழகத்திலும் கள்ளு இறக்க அனுமதி தர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை ரேஸ்கோர்ஸில் மக்களுடன் நடைபயணம்: வாக்காளர்களின் குறைகளை கேட்டறிந்த AIADMK வேட்பாளர் அர்ஜுனன்

தீவிர தேர்தல் பணிகளுக்கு மத்தியில் AIADMK வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்...

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” – கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி..!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கரூரி...

தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலகத்தில் Delimitation எதிர்ப்பு: திமுக கருப்புக்கொடி போராட்டம்

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகள்...

சிங்காநல்லூரில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஏப்ரல் 15ம் தேதி வேனில் ஆவணமின்றி கொண்ட...

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...