மோசமான வானிலையால் துபாய் - கோழிக்கோடு விமானம் கோவையில் அவசர தரையிறக்கம்

துபாயில் இருந்து கோழிக்கோடு செல்லும் 'பிளை துபாய்' விமானம், கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


கோவை: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இன்று (அக்டோபர் 12) காலை சென்று கொண்டிருந்த 'பிளை துபாய்' நிறுவனத்தின் விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானம் அரை மணி நேரத்துக்கும் மேலாக காற்றில் சுற்றியது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் இன்று அக்டோபர் 12 காலை 7.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. வானிலை சீரடைந்த பின்னர் விமானம் கோழிக்கோடுக்கு புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...