உடுமலை அருகே அந்தியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவிதாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



முக்கிய நிகழ்வாக, வரதராஜ பெருமாளுக்கு பஞ்சராத்திர ஆகம முறைப்படி வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன.

இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள கோவை, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, Dharapuram உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்டாசி நான்காவது சனிக்கிழமை சிறப்பு பூஜை மற்றும் திருக்கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...