சென்னையில் திடீர் நெஞ்சுவலியால் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Chennai: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் M.K. Stalin, துணை முதல்வர் Udhayanidhi Stalin, தமிழக அரசின் அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் சவுக்கு சங்கர், கடந்த மே மாதம் பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், மற்ற அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது.

கோவை சிறையில் இருந்து விடுதலையான பின்னர், சவுக்கு சங்கர் மீண்டும் அதே வீரியத்துடன் செயல்பட போவதாக அறிவித்தார். அதன்படி, தற்போது ஊடகங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கும் அவர் வழக்கம் போல் பேட்டி அளித்து வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 12 அன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் தற்போது வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், அவதூறு வழக்கில் கோவை சிறையில் இருந்த போது, தனது கை போலீசாரால் உடைக்கப்பட்டது என்றும், சிறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்ததாகவும் சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...