உடுமலையில் தமிழக வெற்றி கழகம் ஆலோசனைக் கூட்டம்: 2026-ல் விஜய் முதல்வராவார் என தீர்மானம்

உடுமலையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், 2026-ல் விஜய் தமிழக முதல்வராவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை நகர தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆவது உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்து தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெறவுள்ள முதல் மாநாடு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் திருமலை, மாணவரணி தலைவர் ஹரிஹரன், உடுமலை நகர நிர்வாகிகள் காஜா, பிரபு, சந்திரன், பிரேம்குமார், சையது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை, குடிமங்கலம், உடுமலை தெற்கு ஒன்றியம், குடிமங்கலம் வடக்கு ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றிய மகளிர் அணி, உடுமலை தெற்கு பகுதி மகளிர் அணி மற்றும் உடுமலை நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு முன்னதாக, காமாட்சி அம்மன் கோவில், விநாயகர் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் விழுப்புரம் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. சங்கர், "விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டுக்கு கூட்டம் அதிகமாக வரும் நிலையில், அரசின் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது," என்றார்.

மேலும் அவர், "தற்சமயம் தமிழக மக்களுக்காக வாழும் நல்ல தலைவராக விஜய் உள்ளார். மாற்றுக் கட்சி சார்ந்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய் கட்சிக்கு வர தயாராக உள்ளனர். வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வர் ஆவது உறுதி," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...