பொள்ளாச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே 10 நெம்பர் முத்தூரில் சமுதாய நல்லிணக்கம், பெண்கள் உடல்நலம் மற்றும் பாரம்பரிய கலையை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெண்கள் உடல் நலம் பேணிக்காக்கவும் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் முருகபெருமாள், வள்ளி திருமணம் போன்ற பாரம்பரிய கதைகளை நினைவு கூறும் வகையில் வள்ளி கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் நித்தியானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொள்ளாச்சி பகுதியில் காராள வம்ச கலைச்சங்கம் சார்பில் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் உடல்நலம், மனநலம் பேணி காக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பயிற்சி எடுத்தவர்கள் உடலில் இருந்த குறைபாடுகள் நீங்கியுள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்," என்றார்.

மேலும் அவர், "நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையில் விளங்கும் வள்ளிக்கும்மியை மீட்டெடுத்து ஒரே இடத்தில் பதினாறாயிரம் பேரை அரங்கேற்றம் செய்து உலக சாதனை படைத்தனர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டினருக்கும் இந்த பயிற்சி சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இல்லாமலும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த வள்ளி கும்மியை கற்று வருகின்றனர்," என்று தெரிவித்தார்.

"அரசியல் ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு சமுதாய நல்லிணக்கத்திற்கு ஒரு வழியாக வள்ளி கும்மி மாறிக் கொண்டிருக்கிறது," என்று நித்தியானந்தன் கூறினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...