மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை பாலியல் தொழில் இடத்திற்கு அழைத்துச் சென்ற மூவர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற 30 வயது இளைஞரை பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் நேற்று கோவைக்குச் சென்று திரும்பி வந்தார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், தொடர் மழை காரணமாக ஆட்டோவில் வீடு செல்ல முடிவு செய்தார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி (33) என்பவர், இளைஞரை மேட்டுப்பாளையம் சாந்தி நகர் பகுதியில் உள்ள இரண்டு பெண்களிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற இளைஞரிடம் இரண்டு பெண்களும் தகாத முறையில் நடந்து கொண்டனர். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரமடை பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், திம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட 39 வயது பெண்ணை கோவை மாவட்ட பெண்கள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆட்டோவில் ஏற வந்த பயணியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...