கோவை ஆனைகட்டி சாலையில் செங்கல் சூளை புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கன மழை காரணமாக சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையின் 100 அடி உயர புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் ஆனைகட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், சின்னத்தடாகம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள செங்கல் சூளையில் இருந்த புகைப்போக்கி உடைந்து கோவை ஆனைகட்டி சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை ஆனைகட்டி சாலை, தடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பல்வேறு செங்கல் சூளைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.



இந்நிலையில், தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் இருந்த சுமார் 100 அடி உயரம் கொண்ட புகைப்போக்கி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த உடனேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விழுந்த புகைப்போக்கியை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கோவை ஆனைகட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இப்பகுதியில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட புகைப்போக்கிகள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளன. இவை சேதமடைவதற்குள் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்கள் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேலும் புகைப்போக்கிகள் சரியும் அபாயம் இருப்பதால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...