கோவை ஆனைகட்டி சாலையில் செங்கல் சூளை புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கன மழை காரணமாக சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையின் 100 அடி உயர புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் ஆனைகட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், சின்னத்தடாகம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள செங்கல் சூளையில் இருந்த புகைப்போக்கி உடைந்து கோவை ஆனைகட்டி சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை ஆனைகட்டி சாலை, தடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பல்வேறு செங்கல் சூளைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.



இந்நிலையில், தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் இருந்த சுமார் 100 அடி உயரம் கொண்ட புகைப்போக்கி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த உடனேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விழுந்த புகைப்போக்கியை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கோவை ஆனைகட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இப்பகுதியில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட புகைப்போக்கிகள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளன. இவை சேதமடைவதற்குள் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்கள் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேலும் புகைப்போக்கிகள் சரியும் அபாயம் இருப்பதால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...