குறிச்சி பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத மாநகராட்சியினைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக குறிச்சி பகுதி செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமை தாங்கினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காலி குடங்களுடன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், ஆனால் குறிச்சி பகுதியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். 

மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாவதாகவும், மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மக்களை ஒருமுறை கூட பார்க்க வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...