கோவை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி

கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். பெற்றோர்கள் நோய்த் தொற்று அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.



குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனையை தெரிவித்தனர். இதனால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர்.



மேலும், பள்ளி வளாகத்துக்கு வெளியே ஆங்காங்கே சாக்கடைத்து விடுவாறும் பணி நடைபெற்று வருவதால் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

ஒருபுறம் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதனாலும் மறுபுறம் பள்ளி வளாகத்திற்கு வெளியே சாக்கடை சரிவர தூர்வாரததால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், உடனடியாக மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாக்கடை பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகமும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...