கோவை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி

கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். பெற்றோர்கள் நோய்த் தொற்று அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.



குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனையை தெரிவித்தனர். இதனால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர்.



மேலும், பள்ளி வளாகத்துக்கு வெளியே ஆங்காங்கே சாக்கடைத்து விடுவாறும் பணி நடைபெற்று வருவதால் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

ஒருபுறம் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதனாலும் மறுபுறம் பள்ளி வளாகத்திற்கு வெளியே சாக்கடை சரிவர தூர்வாரததால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், உடனடியாக மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாக்கடை பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகமும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...