கோவையில் ASFASM சங்கத்தின் மாநில மாநாடு: NIRF தரவரிசையில் இடம்பெற்ற கல்லூரிகளுக்கு விருது

கோவையில் ASFASM சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு நடைபெற்றது. NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. உயர்கல்வியின் தரம் மற்றும் NIRF மதிப்பீட்டு முறை குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் ஜிவி ஹாலில் ASFASMTN (Association of Self-financing Arts, Science & Mangement Colleges of Tamilnadu) சங்கத்தின் ஒரு நாள் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், NIRF (National Institutional Ranking Framework) 2024 தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

ASFASMTN சங்கத் தலைவரும் ஏஜேகே கல்லூரி தலைவருமான பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, கற்பகம் உயர்கல்வி நிறுவன வேந்தர் முனைவர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



முனைவர் அஜித் குமார் லால் மோகன் தனது உரையில், உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும், NAAC, NIRF போன்றவை கல்வி நிறுவனங்களுக்கு தர நிர்ணய அளவுகோல்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். கல்லூரிகள் தங்கள் தரவரிசையை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முனைவர் ராமசாமி NIRF தரவரிசை நடைமுறைகள் குறித்தும், புதிய கல்விக் கொள்கை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். முனைவர் கீதாலட்சுமி, NIRF தரவரிசையில் உள்ள ஒப்பீடுகள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து விளக்கினார்.

நிகழ்வின் இறுதியில், NIRF 2024 தரவரிசையில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, NIRF குறித்த பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...