வால்பாறையில் கஞ்சா விற்பனை: இரண்டு பேர் கைது, 2.3 கிலோ கஞ்சா பறிமுதல்

வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கைது தொடர்பான விசாரணையில், மேலும் இரண்டு நபர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுபகார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.

சுபகார்த்தியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்றனர். அங்கு, ஏற்கனவே கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பிசந்தா தந்தா என்பவரை கைது செய்தனர்.



பிசந்தா தந்தாவிடமிருந்து 2 கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை வால்பாறைக்கு அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நடவடிக்கையில் உதவி ஆய்வாளர் பழனி, தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் மற்றும் பிற காவலர்கள் ஈடுபட்டனர்.

வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...