திருப்பூரில் குப்பை கொட்டும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் முதலிபாளையத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார பிரச்னைகளை எதிர்த்து, பொதுமக்கள் குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தினசரி 600 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு, முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கல் குவாரி குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுவாசக் கோளாறு மற்றும் சரும நோய் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்னை குறித்து பலமுறை மாநகராட்சியில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



இந்நிலையில், முதலிபாளையம் மற்றும் சென்னிமலை பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குப்பை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...