கோவையில் நில மோசடி: அதிமுக எம்எல்ஏ, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மீது புகார் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

கோவை கீரணத்தம் பகுதியில் 7.9 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டதாக குடும்ப வாரிசுகள் புகார். அதிமுக எம்எல்ஏ, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர், ரியல் எஸ்டேட் நிறுவனர் மீது குற்றச்சாட்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சியால் பரபரப்பு.


கோவை: கோவை கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டதாக குடும்ப வாரிசுகள் புகார் அளித்துள்ளனர். இந்த நில மோசடியில் சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காளிகோனாரின் வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த நில மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையிலும் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, காளிகோனாரின் வாரிசுதாரர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.



அப்போது, வாரிசுதாரரான ஒரு பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு அவரை தடுத்து, தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.



வாரிசுதாரர்கள் பேசுகையில், "உடனடியாக மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.



மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய வாரிசுதாரர்கள், ஹிந்தியில் சத்தமாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதிமுக எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோரை திருடர்கள் என்று குற்றம்சாட்டிய அவர்கள், தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...