கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மறுப்பு

கோவை கீரணத்தம் பகுதியில் நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை அபாண்டமானவை என்று கூறி, அரசியல் பின்னணி இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களிடம் பேசினார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை என்றும், தனக்கும் அந்த நிலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

"இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் அரசியல் பின்னணியோ அல்லது தொழில் போட்டியோ இருக்கலாம்," என்று ராமசாமி கருத்து தெரிவித்தார். புகார்தாரர்கள் தனது தந்தையின் பெயரை அவமதிக்கும் விதமாகப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

30 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தன் மீது எந்த ஒரு கறையும் இல்லை என்றும் ராமசாமி வலியுறுத்தினார். மேலும், குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் தனக்கு 12 வயதும், அதிமுக எம்எல்ஏவுக்கு 10 வயதும்தான் இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

அதிமுக எம்எல்ஏவுடன் தான் முன்னாள் பங்குதாரர் என்றும், இருவரும் சேர்ந்து 7 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாகவும் ராமசாமி தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக புகார்தாரர்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...