கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் இரண்டாம் நாள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முதல் நாளான நேற்று சுமார் 30க்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 17) நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்திய பணியாளர்கள், மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை தொடர்வதாக உறுதியாக தெரிவித்தனர்.



போனஸாக 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுவதாகவும், இது போதுமானதாக இல்லை என்றும் பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பணியாளர்கள் உறுதியாக கூறி, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...