கோவை ரயில் நிலையத்தில் கைதி தப்பியோட்டம்



கருமத்தம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய வழக்கில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த அவர்கள் ஆந்திராவிற்கு தப்பி சென்று வேறு நிறுவனதில் பணியாற்றிய போது அங்கேயும் திருடி மாட்டிக்கொண்டனர். அப்போது நெல்லூர் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெ.எம்-2 நீதிமன்றத்திற்கு ஆந்திர போலீசார் ரயில் மூலம் அழைத்து வந்தனர். பாதுக்காப்பிற்காக 4 ஆந்திர போலீசார் உடனிருந்தனர்.

கால் ஊனமுற்ற தீனதயாளன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று ஆந்திர போலீசாரிடம் கூறிய நிலையில், அவரை போலீசார் கழிவறைக்குள் செல்ல அனுமதித்தனர். அப்போது தீனதயாளன் சுவற்றின் மீது ஏறி தப்பிச்சென்றார். இது குறித்து கோவை ரயில்வே போலீசாரிடம் ஆந்திர போலீசார் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.

முன்னதாக, தீனதயாளன் மீது காளஹஸ்தி, சென்னை போன்ற இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. தற்போது கண்காணிப்பு காமிராக்களில் தப்பிச்சென்ற தீனதயாளனின் பதிவான காட்சிகள் மூலம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...