கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 23 நிலவரப்படி முழு விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகளிலும் மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் மழைநீர் வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வரத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி 64.15 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 564 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 243 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், தொடர்ந்து நீர் வரத்து இருந்து வருகிறது. மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி 55.88 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1130 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி 2.06 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 05 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி 38.55 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 0 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 30 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மார்ச் 23ஆம் தேதி நிலவரப்படி 36.73 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 402 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 593 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



நீர்வளத்துறை அதிகாரிகள், அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...