கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் அதிகரித்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900 வரை விற்பனையானது.


Coimbatore: கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் இந்த மார்க்கெட்டிற்கு மீன்கள் வந்து சேருகின்றன.




ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் செயல்படும் இந்த மொத்த மீன் மார்க்கெட்டிற்கு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் இங்கு நேரடியாக மீன் வாங்க வருகின்றனர்.




இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகை முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு மற்றும் கூட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.




நேற்று மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் மீன் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ.300, இறால் ரூ.550, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600, கண்ணாடி பாறை ரூ.130 என விற்பனையானது.




இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "வழக்கமாக வாங்கும் விலையை விட மீன்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதவிர கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை சுத்திகரிப்புக் கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது" என்று தெரிவித்தனர்.




இதுபற்றி மீன் வியாபாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் மீன்களின் வரத்து அதிகரித்து விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...