மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கோதாபாளையம் பகுதியில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகசாமி என்பவர் இப்பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார்.

இப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ரம்யா என்ற மாணவி கடந்த 13 ஆண்டுகளாக இப்பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை ரம்யா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், பள்ளியின் தாளாளர் முருகசாமி தனக்கு மதுவை கொடுத்து கற்பழித்ததாகவும், இதனால், கருவுற்ற தன்னை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அறங்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

ரம்யாவுடன் சேர்ந்து, சுமதி என்ற பெண்ணும் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக, கருமத்தம்பட்டி போலீசார் முருகசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பள்ளியின் அறங்காவலர் சித்ராதேவி, மேற்பார்வையாளர் ராணி, விடுதி காப்பாளர் பரிமளா, ரேவதி மற்றும் பாபு ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதில், ராணி என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இன்று சூலூர் தாசில்தார் பழனி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளை ஆசிரியர் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...