மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்றும் கால்நடை அறுவை மனைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


Coimbatore: மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி வரும் மார்ச் 31, 2026 செவ்வாய்க்கிழமை அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு மார்ச் 31 அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்றைய தினத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவை மனைகளும் மார்ச் 31 அன்று செயல்படாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை மீறி மார்ச் 31, 2026 செவ்வாய்க்கிழமை அன்று செயல்படும் இறைச்சி கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம் விதிப்பது, இறைச்சி மற்றும் கருவிகளை பறிமுதல் செய்வது, கடைகளை பூட்டி சீல் வைப்பது மற்றும் கடை உரிமத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகாவீர் ஜெயந்தி நாளில் இறைச்சி விற்பனை மற்றும் கால்நடை வதை தடை என்பது ஜெயின சமூகத்தினரின் மத நம்பிக்கைகளை மதித்து ஆண்டுதோறும் தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். கடை உரிமையாளர்கள் இந்த அறிவிப்பை கடைப்பிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோயம்புத்தூர் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...