கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ வடவள்ளி லாலி ரோடில் இருந்து பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் BJP வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ இன்று தனது வேட்பு மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு BJP மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது.




இந்த தேர்தலில் BJP-வின் ராஜஸ்தான் மாநில முதல்வர் Bhajan Lal Sharma சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழக BJP-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வில் பங்கேற்றது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.




வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக, வடவள்ளி லாலி ரோடு அருகே தொடங்கிய இந்த பிரம்மாண்ட ஊர்வலம், வேளாண் பல்கலைக்கழகப் பகுதியைத் தாண்டி கோலாகலமாக மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வானதி சீனிவாசனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.




பின்னர் தடாகம் சாலையில் அமைந்துள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.




இந்த நிகழ்வில் ADMK சார்பில் வடவள்ளி சந்திரசேகர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, கூட்டணியின் ஒற்றுமையை உணர்த்தினர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...