துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: துடியலூர் அரவான் திடல் பகுதியில், மத்திய அரசின் அஞ்சலகம் எதிரில் திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.



பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், மசோதா நகல்களை எரித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.



இதில், துடியலூர் திமுக அலுவலகத்தில் இருந்து கருப்பு உடையணிந்து, கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அரவான் திடல் பகுதியில் உள்ள மத்திய அரசின் அஞ்சலகம் முன்பு திரண்டு, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்நிதி மற்றும் இமயவரம்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...