கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


கரூர்: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுகவின் கொங்கு மண்டல முக்கிய பிரமுகரான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கரூர் செங்குந்தபுரம் நான்காவது சாலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான எம்.சி. சங்கர் ஆனந்திற்கு சொந்தமான ‘சங்கர் ஆனந்த் இன்பிரா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு பணி ஒப்பந்ததாரரான சங்கர் ஆனந்தின் அலுவலகத்திற்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 11 மணியளவில் வந்து திடீர் சோதனையை தொடங்கினர்.

மேலும், இதே பகுதியில் செங்குந்தபுரம் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள மற்றொரு ‘சங்கர் இன்பிரா’ அலுவலகத்திலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல, சங்கர் ஆனந்தின் வீடு அமைந்துள்ள பழனியப்பா நகர் அடுக்குமாடி குடியிருப்பிலும், மேலும் ஐந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கியுள்ளனர்.

இது தவிர, செந்தில் பாலாஜியின் மற்றொரு ஆதரவாளரான கார்த்திக்கிற்கு சொந்தமான ‘சக்தி மெஸ்’, கரூர் - கோயம்புத்தூர் சாலையில் திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. அந்த சக்தி மெஸ் மற்றும் கார்த்திக்கின் கோதை நகர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கியுள்ளனர்.

மேலும், கோயம்புத்தூர் சாலையில் உள்ள ‘கொங்கு மெஸ்’, ராயலூரில் உள்ள அதன் உரிமையாளர் சுப்பிரமணியின் வீடு உள்ளிட்ட மொத்தம் 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 15 பேர் கொண்ட குழுக்களாக கரூரில் முகாமிட்டுள்ளதால், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...