கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பிடித்து, அவரிடமிருந்த ரொக்கப் பணத்துடன் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது பணப்பட்டுவாடா புகார்களால் சூடுபிடித்துள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி வீதி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அப்பகுதியில் இருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கவனித்தனர்.

அவரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அருகிலிருந்த சாலைவழியாக தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயிரிட்டேரி, புதுப்பாலம் அருகே அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் கரூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவரது பையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கூட்டணி கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், பணத்தையும் அந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கோவை வடக்கு தொகுதியில் கரூரில் இருந்து வந்த குழுவினர் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றனர் என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...