காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மயக்கமருந்தியல் படிப்பை முடித்த பின், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், அவருடன் படித்த மாணவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், அந்த உறவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது, மாணவியின் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக கோவைக்கு வந்த பெற்றோர், மாணவி தங்கி இருந்த அறையை பார்த்தபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...